நினைத்தாலே இனிக்கும்

தாஜ்மஹாலைப் பற்றிஇவ்வளவு வியப்பாக பேசுகிறாய்!
எனக்குத்தான் அதிசயமாயிருக்கிறது,
ஒரு அதிசயம் இன்னொரு அதிசயத்தைப் பற்றி பேசுவது......

நீ ஒவ்வொரு முறை கையழுத்திடும் போதும்
தவிப்போடு காத்து நிற்கின்றன மொழிகள்

வண்ணத்துப்பூச்சி சிறகாய் பட படக்கிறது என் இதயம்,
நந்தவனமாய் நீ என் அருகில் நடந்து செல்லும்போது.........

தேவதையை பார்த்தேன் என்று சொன்னால்
என்னை பைத்தியம் என்கிறாயே ...!!!
நீ முகம் பார்க்கும் கண்ணாடி உபயோகிப்பதில்லையா?

தப்பித் தவறி கூட நீ கரும்பலகையை தொட்டுவிடாதே,
அதன்மேல்ஒட்டிக்கொள்ளப் போகிறது உன் சிவப்பு நிறம் .......

தொட்டாலே சுருங்கி விடுமாம் தொட்டாச்சிணுங்கி!
அதற்கு எங்கே தெரியப்போகிறது பார்த்தாலே சிணுங்கும் ,உன்னைப்பற்றி....

வெள்ளை உடையில் இன்று நீ வீதீ உலா...
அதனால்தான் என்னவோ !
கோடையிலும் வானிலை அறிக்கை பனிமூட்டம் என தவறாக வாசிக்கப்பட்டது!

Read more...

காதல் மனு ...!!!

என்றும் இனிபவளே..உனக்காக நான் எழுதும் Document இது..
என்று உன் pictureஐ பார்த்தேனோ,
அன்றே என் ScreenSaverஇல் Display செய்து விட்டேன்..

Bit என உள்ளே நுழைந்து ,Virusஆகா பாரவி,
என் தவறான SoftwareகளைRecycleBin அனுப்பி விட்டாய்..

என் இதயம் Swap செய்து,உன் இதயம் Install செய்தவளே..

ஊரே ஒன்று சேர்ந்து ,என் HardDiskஐ Format செய்தாலும்,மறவாமல் சொல்வேன்என் CPU நீதனடி..

என் CMOSஐ Adminstrate செய்பவாளே..
இறந்தாலும் உனக்காக வாழ்வேன்UPS போல..

ஊரே ஒன்று சேர்ந்து ,என் HardDiskஐ Format செய்தாலும்,மறவாமல் சொல்வேன்என் CPU நீதனடி..

படித்ததில் பிடித் தது.... நன்றி : திரு.சுரேன் . தமிழ் கவிதைகள் இணைய தள பதிவு ..

Read more...